சக்தி ஸ்டோரீஸ் - விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்
சக்தி ஸ்டோரீஸ் விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தை பிடித்து தன் முதுகில் சுமந்து கொண்டு, அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தான். திடீரென விழித்துக்கொண்ட வேதாளம், விக்ரமாதித்தா நான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் அந்த கதையின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கான பதிலை கூறவேண்டும். பதில் தெரிந்தும் மௌனமாக இருந்தால் உனது தலை சுக்குநூறாக வெடிக்கும் என கூறி கதை சொல்ல ஆரம்பித்தது. இப்படி ஆரம்பிக்கும் வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு சொன்ன கதைகளை நம்மில் பலர் எவ்வளவு ஆர்வமாக நமது பால்ய வயதில் படித்திருப்போம். எங்கள் பாட்டி வாங்கி வரும் அந்த அம்புலிமாமா புத்தகத்திற்காக அப்படி காத்து கிடப்போம். புத்தகம் வந்ததும் நானும் என் தம்பியும் சண்டை போடுவோம் யார் முதலில் படிப்பது என்று. ஒவ்வொரு முறையும் எங்கள் சண்டையை பார்த்து தலையை பிய்த்துக் கொள்ளும் பாட்டி கடைசியாக ஒரு உபாயம் செய்தார். அது அம்புலிமாமா வாங்கும்போது கூடவே ரத்னமாலாவும் சேர்த்து வாங்குவது. இப்பொழுது ஆளுக்கொரு புத்தகம் கிட...

