கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் அரட்டை - 4
பொன்னந்திமாலை கொஞ்சம் தேநீர் - கொஞ்சம் அரட்டை - 4 தி ருவாரூரில் நான் பணியாற்றியபோது எங்கள் அலுவலகத்தை சுற்றி நாற்புரமும் நான்கு டீ கடைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடை என்று நாங்கள் டீ இடைவேளையில் டீ குடிக்க செல்வோம். பள்ளிவாசல் எதிரே பெத்தையன் டீ கடை. அவர் டீ யை தவிர காலை நேரங்களில் டிபனும் மாலை நேரங்களில் பக்கோடா, பஜ்ஜி போன்ற ஐட்டங்களும் தயாரித்து விற்பனை செய்வார். அவர் கடையில் மதிய நேரத்தில் கேசரி சூப்பராக இருக்கும். டாப் டக்கர் அது. பழைய நாகை ரஸ்தாவில் அலி கடை. அலி என்பவர் ஒரு பாய். அவர் கடையில் கூட்டம் அள்ளும். ஒன்று மாற்றி ஒன்று என ஏதாவது ஒரு பட்சணம் அடுப்பில் தயாராகி கொண்டே இருக்கும். வாடிக்கையாளர்கள் சூடாக அதை சாப்பிட்டு விட்டு டீ குடிப்பார்கள். அலி கணக்கு எல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். சாப்பிட்டுவிட்டு நாம் என்ன சொல்கிறோமோ அதுதான் கணக்கு. அலி கடையில் கோடை காலத்தில் தயிர்வடை அருமையாக இருக்கும். விலையும் ரொம்ப கம்மியாக இருக்கும். அழகாக கேரட் துருவல், கொத்துமல்லி டாப்பிங் எல்லாம் செய்து தருவார். புளிக்காத நல்ல தயிர். ருசி நெஞ்சை அள்ளும். அ...



